மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்றது. திங்களன்று நடைபெற்ற சந்தா சேர்ப்பு இயக்கத்திற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.ஆர்.ராணி, ஒன்றியக்குழு உறுப்பினர் ஆசிக் ரஹ்மான், கிளைச் செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.